உதிர்ந்த இமை முடியை
அகற்றிய நொடியில்
உன் கண்களில் நான் !
முத்தத்திலும்,
‘அப்பா’ என்ற சத்தத்திலும்,
உன் மூச்சிலும், பேச்சிலும் நான் !
என் எழுத்துக்களுக்கிடயே
உன் கிறுக்கல்கள் தந்த
அர்த்தங்களில் நான் !
உன் கேள்வியில் நான் !
உனக்கு கற்பித்து, கற்றதும் நான் !
வாழ்கையில் நீ, என் குழந்தை
விளையாட்டில் நான், உன் குழந்தை
வாழ்கையே ஒரு விளையாட்டெனின்...
என்னிலிருந்தா நீ ?
உன்னிலிருந்து தானே நான்!
6 கருத்துகள்:
வாவ்.. ஒரு அப்பாவின் உணர்வு பதியப்படுவது இது முதல் முறை என்று நினைக்கிறேன். அற்புதம். வேறேன்ன சொல்ல ?
பின்னோக்கி சொன்னதுக்கு ஒரு ஆம் போட்டுக்கறேன்
கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்.
தலைப்பு - படத்தின் பாதிப்பா?
சிங்கம் களத்துலே இறங்கிடுச்சு டோய்! ;-)))
/*சந்தனமுல்லை சொன்னது…
சிங்கம் களத்துலே இறங்கிடுச்சு டோய்! ;-)))*/
ரிப்பீட்டு....
யதார்த்தம் சொட்டுகிறது!
கருத்துரையிடுக