சனி, 2 டிசம்பர், 2017

அன்பே அன்னையாய் !


நீங்கா நினைவிலிருந்து நீங்கி, 
நீங்கியும் நீங்காமலும் நின்று,
நீங்கியே விட்டது நினைவிலிருந்து... 

நினைவலைகளை தட்டியெழுப்பியதும்- 
என்றோ உன் கரம் பிடித்து நடந்ததும், 
உன் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதும், 
உன் வெப்பம் என் வலியை கரைத்ததும்,
உன் பாசம் முழுவதுமாய் என்னை அரவணைத்ததும், 
உன் கைகள் என் தலை கோதி அமைதிப்படுத்தியதும், 
உணவோடு சேர்ந்து ஊக்கத்தையும் ஊட்டியதும்,
என்னை சிறு சிறு அடியெடுக்கச்செய்து 
சிறகடித்து பறக்க விட்டதும்
நினைவிலிருந்து எட்டிப்பார்க்கின்றன !

உடலாய் உன்னை நினைத்தால் 
இன்று நீ இல்லை...
உணர்வாய் உன்னை நினைத்தால் 
என்றுமே நீ இல்லாமல் இல்லை !

அளவிலா அன்பாய், ஆனந்தமாய், அமைதியாய் 
ஆழ்மனதில் அரும்பிக்கொண்டேதான் இருக்கிறாய் 
அன்னையே !