ஞாயிறு, 22 மார்ச், 2020
சனி, 9 மார்ச், 2019
சனி, 27 ஜனவரி, 2018
என்னவளே, அடி என்னவளே!
காமத்திற்கும் காதலிற்கும்
அப்பால் உள்ள
இயல்பான ஆனந்தத்தை
அனுபவிக்கும் காலம் ...
தோலுக்கென காத்திருந்த
நாட்கள் கடந்து
உன்
தோளுக்கென
காத்திருக்கும் நாட்கள்!
எந்நேரமும்
சாய்ந்து கொள்ள
உன் தோள்
இருக்கின்றதென்ற
உணர்வே ஆனந்தம்!
அன்பாய்,
அனுசரணையாய்,
இயல்பாய்
நான் நானாகவே
வாழும் பேறு
உன்னோடு பெற்றேன்!
எனக்கென
நீ இருக்கிறாய்
என்று நிம்மதியாய்,
சாந்தமாய்
இறுதி மூச்சு விட்டனர்
என் தாய் தந்தை...
நீ
தாயாக
குழந்தைகளோடு
எனக்குமாய்
இருந்து வருகிறாய்!
மேடு பள்ளம் நிறைந்தது
தான் வாழ்க்கை
என்ற புரிதலே
ஆனந்தம்!
ஊடலும்
வாழ்க்கையின்
ஒரு அங்கம்
என்ற புரிதலே
ஆனந்தம்!
சண்டையிட்ட பின்
சரி செய்ய முயற்சி ஏதும்
எடுக்காமல் தானாகவே
சமாதானமாகும்
உன்னுடனான
உறவும் ஒரு வரமே!
எனக்கு நீ
உனக்கு நான்
என்று
முற்றிலுமான சார்பு
வாழ்க்கையாய் இல்லாமலும்...
எனக்கு நான்
உனக்கு நீ
என்று
முற்றிலுமான
தனித்துவம் நிறைந்த
வாழ்க்கையாய் இல்லாமலும்...
இரண்டிற்கும் இடையே
ஒரு உன்னத
உறவு நிலையில்
சுதந்திரச்சார்பை
கண்டு களிக்கிறோம்!
திருமணங்கள்
நிச்சயிக்கப்படும் இடமாய்
மட்டும் இல்லாமல்
உன்னோடு வாழும்
வாழ்க்கையும்
விருப்பு வெறுப்பிற்கு
அப்பால் நிற்பதால்
இதுவும்
சொர்கமே!
P.C Ujesha Sivaramakrishnan
சனி, 2 டிசம்பர், 2017
அன்பே அன்னையாய் !
நீங்கா நினைவிலிருந்து நீங்கி,
நீங்கியும் நீங்காமலும் நின்று,
நீங்கியே விட்டது நினைவிலிருந்து...
நினைவலைகளை தட்டியெழுப்பியதும்-
என்றோ உன் கரம் பிடித்து நடந்ததும்,
உன் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதும்,
உன் வெப்பம் என் வலியை கரைத்ததும்,
உன் பாசம் முழுவதுமாய் என்னை அரவணைத்ததும்,
உன் கைகள் என் தலை கோதி அமைதிப்படுத்தியதும்,
உணவோடு சேர்ந்து ஊக்கத்தையும் ஊட்டியதும்,
என்னை சிறு சிறு அடியெடுக்கச்செய்து
சிறகடித்து பறக்க விட்டதும்
நினைவிலிருந்து எட்டிப்பார்க்கின்றன !
உடலாய் உன்னை நினைத்தால்
இன்று நீ இல்லை...
உணர்வாய் உன்னை நினைத்தால்
என்றுமே நீ இல்லாமல் இல்லை !
அளவிலா அன்பாய், ஆனந்தமாய், அமைதியாய்
ஆழ்மனதில் அரும்பிக்கொண்டேதான் இருக்கிறாய்
அன்னையே !
வியாழன், 1 டிசம்பர், 2016
சனி, 10 செப்டம்பர், 2016
கரைந்த கண்ணோட்டம்

நேற்று கடவுள்
கரைந்ததால்
இன்று மண் ஆனது...
இன்று மண் ...
'நான்' கரைந்ததால்
அதுவே கடவுளுமாய் ஆனது...
ஞாயிறு, 4 செப்டம்பர், 2016
இல்லற தாம்பத்யம்
நான் மகன் நீ ...
இன்று
நான் நீ மகன் சரியா
என்றேன்...
புரியலை என்றாள்
அன்றும்
இரவு கழிந்தது
நான் மகன் அவளென்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




