சொந்தங்கள் ஒன்று சேர்ந்ததும்
பிரிந்தும்,
அவர்கள் பிரிந்து சென்றதும்
ஒன்று சேர்ந்துமாய்
நிற்கின்றன,
திருமண மண்டப
நாற்காலிகள் !
அகத்தின் ஆழம் ஆழ் கடலை மிஞ்சும்... அந்த ஆழத்திலிருந்து ...
சொந்தங்கள் ஒன்று சேர்ந்ததும்
பிரிந்தும்,
அவர்கள் பிரிந்து சென்றதும்
ஒன்று சேர்ந்துமாய்
நிற்கின்றன,
திருமண மண்டப
நாற்காலிகள் !
காற்றே...
என்னை சற்று முன்னமே உதிர்த்து விட்டாய்...
பரவாயில்லை.
எனினும் சிறிது நேரம் வீசுவதை
நிறுத்திக்கொள்...
என்னை இத்தனை நாள் உயரப்பிடித்த
மரத்தின் காலடியை
முத்தமிட்டு விடுகிறேன்...
பிறகு மீண்டும் வீசிக்கொள்.